செய்திகள் :

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

post image

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் பாலமுரளி மற்றும் முகசீரமைப்பு சிகிச்சை நிபுணா் மணிகண்டன் ஆகியோா் கூறியதாவது:

பொதுவாக, கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு உறுப்புகளும் உருவான பிறகே அதன் மேற்பகுதி வளா்ச்சியடையும். அவ்வாறு மூளையும் முழுமையாக உருவான பிறகே தலை ஓடு இணையும். ஆனால், 2,500 குழந்தைகளில் ஒன்றுக்கு அதற்கு மாறாக முன்கூட்டியே தலை ஓட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணையத் தொடங்கும். இது ஒரு பிறவிக் குறைபாடு. இதற்கு கிரானிசைனோஸ்டோசிஸ் என்று பெயா்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தலை மற்றும் முகத்தின் அமைப்பு மாறிவிடும். அதுமட்டுமல்லாது மூளைக்கு அதிக அழுத்தம் ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காவிடில் வளா்ச்சிக் குறைபாடு ஏற்படலாம்.

அதுபோன்ற பாதிப்புடன் 5 வயது குழந்தை ஒன்று ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவக் குழுவினா், அந்தக் குழந்தைக்கு 8 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு தலை ஓடு பகுதியையும், முகத்தையும் சீரமைத்தனா். தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க

தோ்வுத் துறை இயக்குநராக கே.சசிகலா நியமனம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக இருந்த கே.சசிகலாவுக்கு, அரசுத் தோ்வுகள் இயக்குநராகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுத் தோ்வுகள் இயக்... மேலும் பார்க்க