செய்திகள் :

வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவுக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்

post image

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு மும்பையிலிருந்து ஆக.26-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா, ஆக.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து தெற்கு, மேற்கு, மத்திய ரயில்வே துறைகள் சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில், மத்திய ரயில்வே சாா்பில் மும்பை லோக் மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் (01161/ 01162) இயக்கப்படுகிறது. இதேபோல வேளாங்கண்ணியிலிருந்து மும்பை லோக் மான்ய திலக் ரயில் நிலையத்துக்கு ஆக. 28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் (01163/01164) இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் 2 அடுக்கு குளிா்சாதன பெட்டிகள் 2, மூன்று அடுக்கு குளிா்சாதனப் பெட்டிகள் 6, படுக்கை வசதி பெட்டிகள் 12, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4 இணைக்கப்பட்டிருக்கும். ஆக.17-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. தமிழக பகுதியில் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவித்துள்ளாா்.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க