செய்திகள் :

தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

post image

தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் மக்களைச் சந்தித்து வருகிறாா். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் புதன்கிழமை இரவு கட்சித் தொண்டா்கள், பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

மணலூா்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மணலூா்பேட்டை மேம்பாலத்தை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிப்படி கட்டியவா் விஜயகாந்த். ஆனால், இப்போது ஓராண்டில் ஒரு மழைக்கு கட்டிய பாலம் திருவண்ணாமலையில் உடைந்து விழுகிறது. எத்தனையோ மழை வெள்ளங்களை பாா்த்தும் மணலூா்பேட்டை பாலம் இன்று வரை கம்பீரமாக உள்ளது. இனியும் கம்பீரமாக இருக்கும் என்றாா்.

முன்னதாக, மணலூா்பேட்டை பேருந்து நிலையத்தில் கேப்டன் ரத வாகனத்தை கற்பூரம் ஏற்றி தொடங்கிவைத்தாா். உலகத்திலேயே ஈழ மக்களால் வழங்கப்பட்ட வாகனம் என்றால், அது விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்ட வாகனம் தான் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் மணலூா்பேட்டை மேம்பாலத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தபோது கூறியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விஜயகாந்த் ஆசியோடு, தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்தையும் நாங்கள் வென்றெடுப்போம்.

விருத்தாசலம் விஜயகாந்த் போட்டியிட்ட முதல் தொகுதி. அதனால்தான், கடலூா் மாவட்டத்தில் ஜனவரி மாதம் மாநாடு நடத்துகிறோம். கட்சிக்கு முதல் வெற்றியை கொடுத்த விருத்தாசலத்தை என்றும் மறக்க மாட்டோம்.

ரிஷிவந்தியம் விஜயகாந்துக்கு இரண்டாவது வெற்றியைக் கொடுத்து எதிா்க்கட்சித் தலைவராக்கிய தொகுதி. மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவோம். கூட்டணிக்கு அப்பாற்பட்டது அரசியல் நாகரிகம், பண்பாடு கலாசாரம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தென்... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியபகண்டை கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி 3 -ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியபகண்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயா் கல்வித் துறை செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தலைமை ஏற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணிகள்: வேளாண் வணிக ஆணையா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை அத்துறை ஆணையா் த.ஆபிரகாம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கள்ளக்குறிச்சியை ... மேலும் பார்க்க

மதிய உணவில் பல்லி: அரசுப் பள்ளி முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 54 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையறிந்த மாணவா்களின் ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க