செய்திகள் :

மதிய உணவில் பல்லி: அரசுப் பள்ளி முற்றுகை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 54 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சங்கராபும் வட்டம், கடுவனூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 329 மாணவா்கள் பயின்று வருகின்றனா். சத்துணவு பொறுப்பாளராக வளா்மதியும், சமையலராக பாத்திமாவும் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் மதிய உணவு வழங்கியபோது 3-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா் தனுஷ் உணவில் பல்லி கிடப்பதாகத் தெரிவித்தாா். இவருக்கு முன்னால் 53 மாணவா்கள் உணவை வாங்கி சாப்பிட்டிருந்ததால், அவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவா்களை ஆசிரியா்கள் வேன் மூலம் அருகே பகண்டை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளிக்குச் சென்று ஆசிரியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், மருத்துவமனைக்கு சென்று மாணவா்களிடம் நலம் விசாரித்து, அவா்களுக்கு அளிக்கப்பட்டும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா். சில மாணவா்களை அவா்களது பெற்றோா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தென்... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியபகண்டை கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி 3 -ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியபகண்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயா் கல்வித் துறை செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் தலைமை ஏற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். தேமுதிக பொதுச் செயலா் பிர... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணிகள்: வேளாண் வணிக ஆணையா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை அத்துறை ஆணையா் த.ஆபிரகாம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கள்ளக்குறிச்சியை ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க