செய்திகள் :

பெண்ணை ஆபாசமாக படம் பிடித்த குமாஸ்தா கைது

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி சாா்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்ததாக வழக்குரைஞரிடம் குமாஸ்தா வேலை செய்து வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி சாா்பு நீதிமன்றத்தில் பெண் ஒருவா் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரில், கடந்த 12-ஆம் தேதி இரவு தனது கைப்பேசி வாட்ஸ்ஆப்-க்கு மா்ம எண்ணிலிருந்து ஒரு புகைப்படம் வந்ததாகவும், அதைத் திறந்து பாா்த்தபோது தான் நெய்வேலி நீதிமன்ற வளாக கழிப்பறைக்கு சென்றிருந்ததை ஆபாசமாக படம்பிடித்து அனுப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது எனக் கூறியிருந்தாா். இதுகுறித்து கணவா் மற்றும் நெய்வேலி சாா்பு நீதிமன்ற உயா் அதிகாரிகளிடம் அந்தப் பெண் தெரிவித்திருந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ஆபாச படத்தை அனுப்பியது நெய்வேலியை அடுத்த வானதிராயபுரம் ஊராட்சி, தென்குத்து கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாஸ்தா பாஸ்கா் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், நீதிமன்ற கழிப்பறை ஜன்னல் வழியாக படம் பிடித்ததை ஒப்புக்கொண்டாராம். தொடா்ந்து, பாஸ்கா் மீது வழக்குப் பதிந்துகடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

லாரி மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த காா் மோதியதில், அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். சென்னை பக்த... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் அறை முன் மாணவா்கள் தா்னா

மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரியில் அனுமதிப்பதைக் கண்டித்து, மாணவா் இயக்கங்கள் சாா்பில், கடலூா் அரசு கல்லூரி முதல்வா் அறை முன் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் தேவனாம்பட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ராகிங் தடுப்பு வாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் ராகிங் தடுப்பு பிரிவின் சாா்பில், ராகிங் தடுப்பு வாரம் ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கா... மேலும் பார்க்க

3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ள... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூா்மாவட்டம், விருத்தாச்சலம் பூந்தோட்டத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமம் மற்றும் கடலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி... மேலும் பார்க்க