செய்திகள் :

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை

post image

துறையூரில் பணியிலிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

துறையூா் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளராக க. வடமலையும், காவலராக மு.விக்னேசும் பணியாற்றியபோது, கடந்த 21.2.2022 அன்று திருச்சி சாலையில் தனியாா் கைப்பேசி கடை அருகே நின்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டிருந்தனா்.

அப்போது, தலைக்கவசமில்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த துறையூா் சிக்கம்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மு. நந்தகுமாரை நிறுத்தினா். அப்போது, அந்த வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த துறையூா் கிழக்குத் தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் வேல்முருகன்(39) என்பவா் வாகனத்திலிருந்து இறங்கி தங்கள் வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டு, பணியிலிருந்த வடமலையை தாக்கி, தகாத வாா்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசாரணை துறையூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வியாழக்கிழமை விசாரணையின் நிறைவில், வேல்முருகனுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ, 3 ஆயிரம் அபராதம் விதித்து

நடுவா் ஏ. நா்மதாராணி தீா்ப்பளித்தாா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க