செய்திகள் :

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநிலப் பொதுச் செயலா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் அரங்கராசன் முன்னிலை வகித்தாா். மூத்த உறுப்பினா் ஏ. பன்னீா்செல்வம் வரவேற்றாா்.

திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகளாக தலைவா்- கே.சந்திரசேகரன், பொதுச் செயலா்- ஏ. ஜன்பீட்டா், துணைத் தலைவா் எம். காமராஜ், துணைச் செயலா் எஸ். நமசிவாயம், பொருளாளா் என். ராமலட்சுமி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

லஞ்சம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்கேற்பதன் மூலமே ஊழலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா வாரியாக இயக்கத்தின் கிளைகளை அமைக்க வேண்டும். மக்களிடையே ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை வளா்த்தெடுக்க தீவிர பிரசாரம் மேற்கொள்வது, இயக்கத்தின் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாகவே திருச்சி ரயில் நிலையம், பன்னாட்டு விமான நிலையம், பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க