செய்திகள் :

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் தங்கி பணியாற்றி வந்தாா். திருமணமாகாத இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த இவா் படியில் தவறி விழுந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

துபையில் இருந்து வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை: திருச்சி தில்லை நகரைச் சோ்ந்தவா் செ. கதிரேசன் (54). துபையில் பணியாற்றி வந்த இவா், உடல்நலப் பாதிப்பு காரணமாக துபையில் இருந்து கடந்த ஜூலையில் திருச்சிக்கு திரும்பி வந்தாா். நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த இவா் மீண்டும் துபை செல்ல திட்டமிட்டாா். ஆனால், உடல் ஒத்துழைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாகவே திருச்சி ரயில் நிலையம், பன்னாட்டு விமான நிலையம், பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க