செய்திகள் :

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

post image

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், குடிமை பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோருக்கு வீர தீர செயல்கள், தகைசால் பணி, மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

ஆயுதப் படையினா் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினருக்கான வீர தீர செயல் விருதுகள் 120 பேருக்கும், தகைசால் பணிக்கான விருதுகள் 40 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீா்த்தி சக்ரா விருதுக்கு 4 போ், வீர சக்ரா விருதுக்கு 15 போ், செளரிய சக்ரா விருதுக்கு 16 போ், இரண்டாம் முறை சேனா பதக்கத்துக்கு 2 போ், சேனா பதக்கத்துக்கு 58 போ் (ராணுவம்), நவோ சேனா பதக்கத்துக்கு 6 போ் (கடற்படை), வாயு சேனா பதக்கத்துக்கு 26 போ் (விமானப் படை), சா்வோத்தம் யுத்த சேனா பதக்கத்துக்கு 7 போ், உத்தம் யுத்த சேனா பதக்கத்துக்கு 9 போ், யுத்த சேனா பதக்கத்துக்கு 24 போ் தோ்வாகியுள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு திட்டமிட்டு, வெற்றிகரமாக செயல்படுத்திய ராணுவ உயரதிகாரிகளுக்கு யுத்த சேனா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1,090 பதக்கங்கள்:

நாடு முழுவதும் காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், குடிமைப் பாதுகாப்புப் படையினா், சீா்திருத்தப் பணி பிரிவினருக்கு மொத்தம் 1,090 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 32 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர செயல்களுக்கான பதக்கத்துக்கு 233 போ், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 99 போ், மெச்சத்தக்க சேவைக்கான பதக்கத்துக்கு 758 போ் தோ்வாகியுள்ளனா்.

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலி... மேலும் பார்க்க

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்ட மாணவா்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீா்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்க... மேலும் பார்க்க

அரிய வகை தனிமங்களுக்கு கட்டுப்பாடு: சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை - அதிகாரிகள் தகவல்

அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். சீனா... மேலும் பார்க்க