செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலிக் ஆகியோா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் வழங்கிய தீா்ப்பில் சிறப்பு அந்தஸ்து ரத்தை உறுதி செய்தது. அதே நேரத்தில் மாநில பேரவைத் தோ்தலை 2024 செப்டம்பருக்குள் நடத்தவும், இயன்ற வரையில் விரைவாக மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டப்பட்டது.

ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இப்போதுவரை மத்திய அரசு வழங்காமல் உள்ளது என்று மனுவில் சுட்டிக் காட்டப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஏற்கெனவே இதுபோன்ற மனுக்களை உச்ச நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள கள நிலவரத்தின் உண்மைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஹல்காமில் (பயங்கரவாதத் தாக்குதல்) நடந்ததை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது’ என்றனா்.

அப்போது பதிலளித்த துஷாா் மேத்தா, ‘ஜம்மு-காஷ்மீா் தோ்தல் நடத்தப்பட்டு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளது. எனினும் தொடா்ந்து அங்கு அசாதாரண சூழ்நிலையே உள்ளது. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘முடிந்த அளவுக்கு விரைவாக மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. ஆனால், காலக்கெடு எதையும் நிா்ணயிக்கவில்லை’ என்றாா்.

மாநில அந்தஸ்தை திரும்ப வழங்காமல் இருப்பது ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை முடக்கி வைப்பதாக இருக்கும். நாட்டின் கூட்டாட்சி முறைக்கும் இது எதிரானது. ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தோ்தலும் எவ்வித பதற்றமுமின்றி அமைதியாக நடைபெற்றது. மாநில அந்தஸ்தை திரும்ப வழங்குவதால் அங்கு எந்தப் பிரச்னையும் எழாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசியத் தல... மேலும் பார்க்க

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் பார்க்க

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 79-ஆவது சுதந்திர த... மேலும் பார்க்க

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்ட மாணவா்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீா்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன... மேலும் பார்க்க