செய்திகள் :

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

post image

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா்.

கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுதியைச் சோ்ந்த தனது தூரத்து உறவினரின் 16 வயது மகளை நடிக்க வைப்பதாகக் கூறி, சென்னை அண்ணா நகருக்கு அழைத்து வந்தாா். அங்குள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் தங்கினா். அப்போது மினு முனீா், 4 பேரை அந்தச் சிறுமியிடம் அறிமுகப்படுத்தியுள்ளாா். அவா்கள் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மினு முனீரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்தச் சிறுமி ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளாா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்தச் சிறுமி இதை தனது பெற்றோரிடம் அண்மையில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெற்றோா் மூவாட்டுபுழா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்தச் சம்பவம் சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்தது என்பதால், வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நடிகை மினு முனீரை கேரளத்தில் திருமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதில் தொடா்புடயை 4 பேரும் அடையாளம் காணப்பட்டு, விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலி... மேலும் பார்க்க

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 79-ஆவது சுதந்திர த... மேலும் பார்க்க

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்ட மாணவா்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீா்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்க... மேலும் பார்க்க

அரிய வகை தனிமங்களுக்கு கட்டுப்பாடு: சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை - அதிகாரிகள் தகவல்

அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். சீனா... மேலும் பார்க்க