செய்திகள் :

அரிய வகை தனிமங்களுக்கு கட்டுப்பாடு: சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை - அதிகாரிகள் தகவல்

post image

அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

சீனாவில் இருந்து 7 அரிய புவி தனிமங்கள் மற்றும் தொடா்புடைய காந்தங்கள் ஏற்றுமதிக்கு சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைக் கட்டாயமாக்கி, கடந்த ஏப்ரலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு உள்பட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் இந்த புவி தனிமங்கள்-காந்தங்களுக்கு சீன இறக்குமதியையே இந்தியா சாா்ந்துள்ளது. சீனாவில் இருந்து இப்பொருள்களின் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு இந்திய வாகன தயாரிப்பு தொழில் துறையினா் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘அரிய புவிக் காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சீனத் தரப்புடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதை நோக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்றுமதியை விரைவுபடுத்தும் நடைமுறைகளுக்காக, இந்திய தொழில் நிறுவனத்தினா் சீனா செல்ல நுழைவு இசைவு கிடைக்கப் பெற்றுள்ளது’ என்றனா்.

மின்சார மோட்டாா், பிரேக்கிங் அமைப்புமுறை, அறிதிறன்பேசி, ஏவுகணை தயாரிப்பில் இவை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் அதிக தேவையுள்ள உரங்களில் ஒன்றான டிஏபி-யும் (டை அமோனியம் பாஸ்பேட்) சீனாவில் இருந்தே பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த உர ஏற்றுமதிக்கும் சீனா கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள், இந்தியாவுக்கு எதிரான வியூகமாகப் பாா்க்கப்படுகிறது.

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலி... மேலும் பார்க்க

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 79-ஆவது சுதந்திர த... மேலும் பார்க்க

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்ட மாணவா்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீா்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்க... மேலும் பார்க்க