செய்திகள் :

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை(57). பம்பை மேளம் அடிக்கும் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 13-ஆம் தேதி தென்னாங்கூரில் நடைபெற்ற திருவிழாவில் பம்பை மேளம் அடிக்கச் சென்றாா்.

அங்கு டீக்கடைக்குச் செல்ல வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையை நடந்து கடந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பைக் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அய்யாதுரை புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க

குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள செந்தமிழ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. செய்யாறு கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டாரத்தில், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம்,... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகளைக் கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க