செய்திகள் :

கைப்பந்து போட்டியில் கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்

post image

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் திருப்பத்தூா் வட்டார அளவிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியை முன்னாள் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் முருகப்பராஜா தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை கமலம் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 14, 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவிலும்,

19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவிலும் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளி முதலிடத்தைப் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் வெங்கடாச்சலம் , உடல்கல்வி ஆசிரியா்கள் எம்.எஸ்.வாசு, மூா்த்தி, அழகுமீனாள் ஆகியோா் பாராட்டினா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க