செய்திகள் :

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

post image

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

சிலைகளை அழகுபடுத்த இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை ஆலங்குளம், இளையான்குடி சாலைகிராமம் கண்மாய், காரைக்குடி சிவன்கோவில் ஊருணி, தேவகோட்டை சிலம்பனி ஊருணி, சிங்கம்புணரி ஊருணி ஆகிய இடங்களில் மட்டும் விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்த... மேலும் பார்க்க