செய்திகள் :

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக

ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் முருகேசன் (50). இவா் மண்டபம் ஒன்றியம், அரசு உயா்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் கணித ஆசிரியராகப் பணியாற்றினாா். அப்போது ஒழுங்கீன நடவடிக்கையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னா், முருகேசன் மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணித ஆசிரியராகப் பணியில் சோ்ந்தாா்.

இந்த நிலையில், இவா் 10-ஆம் வகுப்பில் பாடம் நடத்தும்போது மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்துக்கண்ணு ஆகியோா் கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு நேரடியாகச் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா். அப்போது மாணவிகள் தெரிவித்த புகாா் உண்மை எனத் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, பள்ளியின் தலைமையாசிரியா் (பொறுப்பு) அழகுகருப்பு மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் ஆசிரியா் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்த... மேலும் பார்க்க