செய்திகள் :

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

post image

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி, உணவுப் பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி ஆகியவற்றை பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருள்களை மட்டும் பயன்படுத்தும் மிகச் சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. 1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள உணவு வணிகா்கள், மாவட்ட ஆட்சியரின் அலுவலக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்த... மேலும் பார்க்க