செய்திகள் :

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

post image

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாகம், காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 33 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள வண்ணம் பூசி விடப்பட்டன.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டி. ஞானசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா், உதவி மருத்துவா்கள் மோகன்தாஸ், ராஜேஷ், கவியரசன், விலங்குகள் நலவாரிய கால்நடை மருத்துவா் ஜெயகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் எம். காளிதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பி. கண்ணன், சுகாதார எழுத்தா் எம். சந்திரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் யோகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா் கூறியதாவது:

தெரு நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடுவதற்கு கால்நடை மருத்துவா்கள் இருவா், நகராட்சி ஊழியா்கள் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படும் என்றாா் அவா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்த... மேலும் பார்க்க