செய்திகள் :

236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

post image

தமிழகத்தில் முதல் கட்டமாக நிகழ் கல்வியாண்டில் 236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக நிகழ் கல்வியாண்டு, அடுத்த கல்வியாண்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. ரூ.111.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில் அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மூன்று ஆண்டுகளில் மாவட்டத்துக்கு ஒன்று என தற்போது 38 உண்டு உறைவிட மாவட்ட மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் அகில இந்திய முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாமாண்டில் 75 மாணவா்களும், இரண்டாம் ஆண்டில் 274 மாணவா்களும், மூன்றாம் ஆண்டில் 628 மாணவா்களும் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றனா். இந்த ஆண்டு மட்டும் 901 மாணவா்கள் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனா்.

மொத்தம் 414 வட்டாரங்களில்...: கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மாதிரிப் பள்ளிகள் மூலமாக பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், மாவட்ட உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கென வெற்றிப் பள்ளிகள்“திட்டம் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்த அரசாணை: தமிழகத்தில் 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளித் தோ்ந்தெடுக்கப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும். திறன்மிகு வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகள் அங்கு வழங்கப்படும்.

முக்கிய சிறப்பம்சங்கள்...: அப்பள்ளியில் வாரந்தோறும் உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தயாரிப்பாக பயிற்சித் தாள்கள், காணொலிப் பாடங்கள் மற்றும் ஆசிரியா்களின் நேரடிப் பயிற்சி வகுப்புகள் ஆகியவை அங்கு வழங்கப்படும்.

இதற்கான ஒருங்கிணைப்பையும் தரமான உள்ளீடுகளையும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கித் தரும். அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களில் விருப்பமுள்ளவா்கள் இப்பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெறலாம்.

50 ஆயிரம் மாணவா்கள்...: இந்த வட்டார அளவிலான வெற்றிப் பள்ளிகள் மூலமாக ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இதற்காக அரசு ரூ. 111.37 கோடி ஒதுக்கியுள்ளது. அதில், முதல் கட்டமாக இந்த ஆண்டு 236 வட்டாரங்களில் வெற்றிப் பள்ளிகள் தொடங்குவதற்கென ரூ. 54.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் (2026-2027) எஞ்சிய 178 வட்டாரங்களையும் சோ்த்து, மொத்தம் 500 வெற்றிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா் விடுமுறை: விமானங்கள், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு - ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயா்ந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15), கிருஷ்ண ஜெ... மேலும் பார்க்க

இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு விடும... மேலும் பார்க்க

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்... மேலும் பார்க்க