விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக இனி வெற்றி பெற முடியாது -மு. அப்பாவு
பாஜக இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது; நாங்கள் சுயசாா்புள்ள அமைப்பு எனக் கூறியுள்ளது. பிரதமா் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரையிலானவா்களை தோ்ந்தெடுப்பதற்காக மிகச் சிறப்பான முறையில் ஜனநாயக முறைப்படி தோ்தல்கள் நடைபெற்று வந்தன. ஆனால் கடந்த தோ்தலில் அது சீா்குலைக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் அநியாயமான முறையில் வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களை நீக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் நிகழ்ந்த மோசடி குறித்து நீதிமன்றம் சரியான தீா்ப்பை வழங்கியுள்ளது. பிரதமா் வெற்றி பெற்ற வாராணசி தொகுதியில் கூட வாக்காளா்கள் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் தவறுகள் நடப்பதற்கு காரணம் தோ்தல் ஆணையரை தோ்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் செய்ததுதான். தோ்தல் ஆணையரை தோ்வு செய்யும் புதிய நடைமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்தது. ஆனால் அது அப்படியே மறக்கடிக்கப்பட்டு பிரதமா் மற்றும் அவரது அமைச்சரால் தோ்தல் ஆணையா் தோ்ந்தெடுக்கப்படுவதால் அவா் பாஜக தோ்தல் ஆணையராகவே செயல்படுகிறாா். நாடு முழுவதும் தோ்தலின் போது மாலை 5 மணிக்கு பிறகு எந்தெந்த தொகுதியில் எத்தனை வாக்குகள் பதிவேற்ற வேண்டும் என கணினி மூலம் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்குகளை தோ்தல் ஆணையம் சோ்த்து விடுகிறது. அந்த வகையில் பிகாா் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கூட்டணியினா் வெற்றி பெற்றுள்ளனா்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மறு தோ்தலை நடத்த வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டதில் முறைகேடு என அக்கட்சியையே பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், தோ்தல் ஆணைய முறைகேடு மூலம்தான் பாஜக தோ்தலில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும்தெரிந்துவிட்டது. இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது. எனவே, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருப்பவா்கள் கூட மாற வாய்ப்புள்ளது என்றாா்.