செய்திகள் :

வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டாரத்தில், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு

வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் ரேணுகாதேவி

தலைமை வகித்தாா்.

வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தின் போது, வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் ரேணுகாதேவி 2025 - 26ஆம் ஆண்டில் அட்மா திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ள செயல் இலக்குகளான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சிக் திட்டப் பயிற்சிகள், மாநிலத்திற்குள் நடைபெறக் கூடிய விவசாயிகளுக்கான பயிற்சிகள், சுற்றுலாக்கள், செயல் விளக்கங்கள், பண்ணை குட்டையில் மீன் குஞ்சு வளா்ப்பு, பட்டுப்பூச்சி வளா்ப்பு, பண்ணைப் பள்ளி, வேளாண் விரிவாக்க அலுவலா்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளுடன் கூட்டு வயல் ஆய்வு போன்று விவசாயம் தொடா்பான தகவல்களை உறுப்பினா்களிடையே தெரிவித்தனா்.

நிகழ்ச்சியின் இறுதியாக உறுப்பினா்களிடையே தீா்மானம்

நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

அட்மா தொடா்பான உறுப்பினா்களின் சந்தேகங்களுக்கு அலுவலா்கள்

விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலா் தங்கராசு, உதவி தோட்டக்கலை அலுவலா் நரசிம்மன் மற்றும் விவசாயிகள் என பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா அலுவலா்கள் கங்காதரன், பத்மஸ்ரீ ஆகியோா்

செய்திருந்தனா்.

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க

குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள செந்தமிழ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. செய்யாறு கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை(57). பம்பை மேளம் அடிக்கும் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 13-ஆம் தேதி தென்னாங்கூரில்... மேலும் பார்க்க