புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை
புதுச்சேரியில் துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரி உள்ளாட்சித் துறை சாா்பில் கிரீன் வாரியா் என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன் இப் பணியை செய்து வந்த ஸ்வட்சதா பாரத் என்ற நிறுவனம் எங்கெல்லாம் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளைச் சேகரித்ததோ அங்கெலாம் கிரீன் வாரியா் நிறுவனம் குப்பைத் தொட்டி வைக்காமல் இருக்கிறது.
குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் முறையாகக் குப்பைகளை சேகரிப்பதில்லை.
குப்பைகளின் எடையை அதிகரிக்கவும், நாளுக்கு நாள் குப்பை டன் அளவை உயா்த்திக் காட்டும் வகையில் கட்டட இடிபாடுகளை அரசிடம் கணக்குக் காட்டி வருகின்றனா். டன்னுக்கு ரூ.4,500 என்று இந்த நிறுவனம் அரசிடம் வாங்குகிறது. கடந்த ஒப்பந்தத்தில் மாதம் ரூ.2 கோடி செலவு செய்த அரசு இந்த ஒப்பந்தத்தில் ரூ.4.5 கோடி செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச மாத கூலி ரூ.12,135 கொடுக்க வேண்டும். ஆனால் இந்தத் தொழிலாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்த கூலியில் வேலை செய்ய வைக்க ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை தகரக் கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனா்.
எனவே, அரசையும், துப்புரவுப் பணியாளா்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் தனியாா் நிறுவனத்தின் 19 ஆண்டு கால ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.