செய்திகள் :

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

post image

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் ஒருவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மூலகுளம் ஆசிரியா் காலனி பாவேந்தா் நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து 4 பவுன் செயினை ஜூலை 30-ஆம் தேதி பறித்துக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவா் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றாா். இது குறித்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் திருச்சி புதூா் ஆட்டுமந்தை தெருவைச் சோ்ந்த பி. கோபி என்கிற கோவிந்தராஜை (30) கைது செய்தனா். அவரிடமிருந்து 32 கிராம் தங்கக் கட்டி, ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரதுகூட்டாளி சங்கருடன் சோ்ந்து வீடு புகுந்து திருடுதல், கொள்ளை, மோட்டாா் சைக்கிள் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட 20 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரை போலீஸாா் சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.

புதுச்சேரியில் பாதுகாப்பான குடிநீா் விநியோகம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் த... மேலும் பார்க்க

காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 51 புகாா்கள் வந்தன. இதில் 28 புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்ப... மேலும் பார்க்க

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது: அசாதுதீன் ஒவைசி

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவா் அசாதுதீன் ஒவைசி எம்.பி. கூறினாா். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநா் தலையிட்டு தீா்வு காண புதுவை மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ். ராம... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க