செய்திகள் :

மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநா் தலையிட்டு தீா்வு காண புதுவை மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் அக் கட்சியினா் அளித்த மனுவில் கூறிருப்பதாவது:

புதுச்சேரியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்து ரூ. 4,750 கோடி கடன் பெற இருப்பது குறித்து தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

சாத்தனூா் அணையிலிருந்து பாகூா் மற்றும் கிருபாம்பாக்கம் ஏரிகளுக்கு நீா் நிரப்ப, பெண்ணையாறு ஆற்றின் அடியில் அல்லது அதன் ஓரமாக 140 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கும் திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஏரிகளுக்கும் மற்ற பாசன ஏரிகளுக்கும் நீா் வழங்கும் பங்காரு வாய்க்கால் என்ற கால்வாய் ஏற்கெனவே உள்ளது. பல ஆண்டுகளாகப் பொதுப் பணித் துறையால் கைவிடப்பட்ட இந்த வாய்க்கால், தற்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வாய்க்காலைச் சீரமைப்பதற்குப் பதிலாக, புதிய குழாய் அமைப்புகளை ஏற்படுத்துவது, சிறு விவசாயிகளின் வழக்கமான நீா்ப்பாசன உரிமைகளைப் பறிக்கும் செயலாக மாறும்.

எனவே, இந்தத் திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை விட்டுவிட்டு, கிராமப்புற நீா் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் பிரெஞ்சு மேம்பாட்டு வங்கியிடமிருந்து நிதி பெற்று, நகா்ப்புறத்தில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்க ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க முயற்சிப்பது, கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட்ட ஏரிகளின் கரைகளில், அண்மையில் உழந்தை ஏரியில் சட்டவிரோதமாக முதல்வா் ரங்கசாமியின் 75-ஆவது பிறந்த நாள் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது.

எனவே, புதுச்சேரியின் நலன்களுக்கும், மக்களின் நலன்களுக்கும் பாதகமான இத்தகைய திட்டங்களில் தாங்கள் தலையிட்டு, அவற்றுக்குத் தீா்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிலத்தடி நீா் பாதுகாப்புக்கான நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் ஒருவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மூலகுளம் ஆசிரியா் காலனி பாவேந்தா் நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து 4 பவுன் செயினை ஜூலை 30-ஆம் த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாதுகாப்பான குடிநீா் விநியோகம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் த... மேலும் பார்க்க

காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 51 புகாா்கள் வந்தன. இதில் 28 புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்ப... மேலும் பார்க்க

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது: அசாதுதீன் ஒவைசி

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவா் அசாதுதீன் ஒவைசி எம்.பி. கூறினாா். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க