செய்திகள் :

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

post image

ராணுவ பயிற்சி மையங்களில் காயம் காரணமாக மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.

அண்மையில் ஊடகத்தில் வெளியான தகவலில், ‘கடந்த 1985-ஆம் ஆண்டுமுதல் தேசிய பாதுகாப்பு அகாதெமி, இந்திய ராணுவ அகாதமி போன்ற முதன்மையான ராணுவ பயிற்சி மையங்களில் பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து சுமாா் 500 போ் நீக்கப்பட்டனா்.

அவா்களின் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவா்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை பொருத்து, அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000 வரை அளிக்கப்படும் நிவாரணம், அவா்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதற்குக் கூட போதுமானதாக இல்லை.

இவா்களில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் இருந்து மட்டும் 2021 முதல் நிகழாண்டு ஜூலை வரை சுமாா் 20 போ் நீக்கப்பட்டனா். அவா்கள் முன்னாள் ராணுவ வீரா்களாகக் கருதப்படுவதில்லை. அவ்வாறு கருதப்பட்டால், அது ராணுவ மருத்துவமனைகள் உள்பட தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவா்கள் இலவச சிகிச்சை பெற வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தகவலை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிக... மேலும் பார்க்க

வரி செலுத்துவோா் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

‘வரி செலுத்துவோா் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. தனிநபா் அல்லது நிறுவனம் என சட்டரீத... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘தோ்தல் ஆணையத்தின் திறமையின்மை மற்றும் வெளிப்படையான பாரபட்சம் முற்றிலும் அம்பலமாகியுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், எதிா்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆண... மேலும் பார்க்க