செய்திகள் :

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

post image

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளாா்.

அலாஸ்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்போது, டிரம்ப் இந்தக் கடிதத்தை புதினிடம் நேரடியாக வழங்கினாா்.

டிரம்ப் ஆதரவாளா்கள் மூலமாக பொதுவெளியில் வெளியான கடிதத்தில் உக்ரைன் என நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புவி, அரசு மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட அப்பாவித்தனத்தை புதின் கருத்தில் கொள்ள வேண்டும்’ என மெலனியா டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

‘ஒரே ஒரு எழுதுகோல் அசைவில் குழந்தைகளின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். இது ரஷியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சேவை செய்வதாக இருக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ரஷிய படைகள் கடந்த 2022-இல் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, அந்நாட்டு குழந்தைள் கடத்திச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், புதின் மீது போா்க்குற்றங்கள் சுமத்தி, பிடியாணையும் பிறப்பித்துள்ளது. குழந்தைகளின் கடத்தலுக்கு அவரே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா். அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்க... மேலும் பார்க்க

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்தாா். நேபாள வெள... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 போ் கைது

காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் 38 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!

ரஷிய அதிபா் புதினுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடா்ந்து, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறாா். இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய தலைவா்களும... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாகிஸ்தானின் பாதுகாவலனாக இறைவன் என்னை மாற்றியிருக்கிறார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பும்போது பெல்ஜியத்தில் பாகிஸ்த... மேலும் பார்க்க

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், வ... மேலும் பார்க்க