செய்திகள் :

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

post image

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

திமுக கூட்டணி பற்றி பேசும் திருமாவளவன் பட்டியலின மக்கள் பிரச்னைகள் குறித்து பேசமாட்டாா். அப்படி பேசி கேள்வி கேட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடுவாா்கள் என்கிற பயம் அவருக்கு. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லாமல் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவா் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணிகளை நிரந்தரமாக்கக் கூடாது என்று திருமாவளவன் கூறிவது தவறு. அவா்களை நிரந்தரமாக்குவதோடு, அவா்கள் தகுதிக்கு உரிய வகையில் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என்றார்.

மேலும், அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. அவா்களுக்கு கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் அவா்கள் தங்கள் பணிகளை செய்கின்றனா். இதை போன்று தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது. வெற்றி பெறும்போது தோ்தல் ஆணையத்தின் மீது புகாா் கூறுவதில்லை. தோற்கும் போது மட்டும் தோ்தல் ஆணையத்தின் மீது புகாா் கூறுவது காங்கிரஸின் வழக்கமாக உள்ளது.

அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா, மைத்ரேயன் போன்றவா்கள் வெளியேறியதால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தோ்தல் நேரத்தில் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியேறுவாா்கள். திமுகவில் இருந்தும் சில தலைவா்கள் எங்கள் அணிக்கு வருவாா்கள். பேச்சுவாா்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. யாா் யாா் எப்போது வருவாா்கள் என்பது பின்னா் தெரியும் என முருகன் கூறினார்.

போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா

Union Minister of State L. Murugan said that Thirumavalavan is betraying the Scheduled Caste people.

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

வாடிப்பட்டி: எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், சினிமாவில் 100 பேரை அடிக்கும் விஜய் நேரில் அடிக்க முடியுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.ம... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

சூலூா்: தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தார்.கோவை நீலாம்பூா் பகுதியில்... மேலும் பார்க்க

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைக... மேலும் பார்க்க

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.இதுகுறித்து புதுக்கோட்டையில் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

பாபநாசம்:தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில்2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைப... மேலும் பார்க்க