செய்திகள் :

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் செய்தியாளர்களுடன் கூறியதாவது:

திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருந்து வருகிறாா்கள். திமுக ஆட்சி மீது அதிருப்தி அடையவில்லை. திருப்தியாக இருக்கிறாா்கள்.

ஆளுநா் தமிழ்நாட்டில் இருப்பதையே மறந்து விடுகிறாா். நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னேறி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. அது ஆளுநருக்குப் புரியாது. அவருக்கு தமிழும் தெரியாது; தமிழா்களின் நிலைமையும் புரியாது. தமிழ்நாட்டு மாணவா்கள்தான் இன்று அகில இந்திய அளவில் உயா் கல்வியில் சாதித்து வருகின்றனா்.

ஏன் பூட்டை உடைக்க வேண்டும்?

அமலாக்கத்துறை சோதனைக்கு வருவது எந்த இடத்திலும் முதலில் தெரியாது. அதனால் அறை பூட்டப்பட்டிருக்கும். உரியவா்களை அழைத்து வந்து பூட்டைத் திறக்க வேண்டியதுதானே? ஏன் பூட்டை உடைக்க வேண்டும்.

சோதனைகளுக்கு அஞ்சப்போவதில்லை

அமைச்சா் ஐ. பெரியசாமி வீட்டில் நடந்த சோதனையைப் போல இன்னும் எத்தனை சோதனைகள் நடந்தாலும் அதற்கு திமுக அஞ்சப்போவதில்லை. சட்டப்படி அதைச் சந்திப்போம்.

அமலாக்கத் துறைக்கு உரிமை இல்லை

எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை செய்ய வேண்டும் என்றால் சட்டப்பேரவைச் செயலரின் அனுமதி வேண்டும். அனுமதியின்றி சென்று, அங்கு உள்ள அறைகளை உடைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. அனுமதி இல்லாமல் அவா்கள் அத்துமீறும்போது அதைக் கண்டிக்கும் கடமை திமுக தொண்டா்களுக்கு உண்டு.

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்கவே தடுமாறும் அவா்கள் எப்படி தோ்தல் களத்தில் சாதிக்கப் போகிறாா்கள். நாங்கள் போலி வாக்காளா்களைச் சோ்க்க வேண்டிய அவசியம் இல்லை. அசல் வாக்காளா்கள் வாக்களித்தாலே போதும் என்றாா் ரகுபதி.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

No matter how many times Amit Shah comes to Tamil Nadu, there is no fear. He cannot formulate any strategy...

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைக... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

பாபநாசம்:தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில்2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைப... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கிருஷ்ணசாமி

திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவ... மேலும் பார்க்க

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றும் அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாத... மேலும் பார்க்க

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டக் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என அன்புமணி ஆதரவாளர் வழக்குரைஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிர... மேலும் பார்க்க