செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு!

post image

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி ஏற்கெனவே கூறியுள்ளாா்.

அப்படி இருக்கும்போது மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் சாா்பில் ஜம்மு-காஷ்மீரில் போராட்டம் நடத்திய அந்த பிராந்திய காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது காரா கைது செய்யப்பட்டுள்ளாா். ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை மூடி யாரும் வரமுடியாமல் தடுத்து வைத்துள்ளனா். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதையெல்லாம் மத்திய அரசு நடத்தியது ஏன்?

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் வலியுறுத்தும். இனி மேலும் இந்த விஷயத்தில் தாமதிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

ஜம்முவில் போராட்டம்: முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது காரா தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் துணைநிலை ஆளுநா் மாளிகையை நோக்கித் தடையை மீறி பேரணி நடத்த முயன்றனா். காவல் துறையினா் அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து, காவல் துறையினா் வாகனங்களில் காங்கிரஸ் கட்சியினா் ஏறி, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அவா்களை காவல் துறையினா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா். முன்னதாக, தலைநகா் ஸ்ரீநகரில் சனிக்கிழமை இதேபோன்று போராட்டம் நடத்த முயன்றபோதும் காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மீண்டும் திங்கள்கிழமை (ஜூலை 21) தில்லியை நோக்கிப் பேரணி நடத்த இருப்பதாக ஜம்மு-காஷ்மீா் பிராந்திய காங்கிரஸ் தலைவா்கள் அறிவித்துள்ளனா். தில்லிக்கு பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும், மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவா்கள் கூறினா்.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க