செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதிகளா? இஸ்ரேலின் தவறால் என்ன நடந்தது?

post image

ஜம்மு - காஷ்மீர் இல்லாத, இந்தியாவின் தவறான வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் காட்சிப்படுத்தியதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் அதன் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகள் குறித்த வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தப் பதிவுக்கு, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் அதிகரித்து வந்த சூழலில், அந்நாட்டு ராணுவம் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

“இந்தப் பதிவு, பகுதிகளைக் குறித்த படமாகும். இதில், எல்லைகளைத் துல்லியமாகக் காட்ட தவறிவிட்டது. இதற்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பதிவில் இதுவரை இந்திய வரைப்படமானது மாற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இத்துடன், இஸ்ரேலின் விமானப் படையும், இதேபோன்ற ஒரு வரைப்படத்தை பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த வரைப்படத்தை நீக்க அல்லது சரி செய்யவேண்டுமென தான் வலியுறுத்தியுள்ளதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவன் அஸார் தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை ரஷியா திசை திருப்ப முயற்சி?

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்த... மேலும் பார்க்க

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில்... மேலும் பார்க்க

நைஜீரியா: மர்ம நபர்களின் கொடூரத் தாக்குதலில் 100 பேர் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக த... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத்... மேலும் பார்க்க

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு பதற்றம்: டிரம்ப்-புதின் பேச்சு

இஸ்ரேல்-ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் தொலைபேசியில் சனிக்கிழமை பேசினா். இதுதொடா்பாக ரஷிய தலைந... மேலும் பார்க்க