செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது ஆம் ஆத்மி!

post image

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் திரும்பப் பெற்றாா்.

முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால் ஆம் ஆத்மி விலகல் அரசில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

90 உறுப்பினா்கள் கொண்ட பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 42 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 6 எம்எல்ஏக்களும் உள்ளனா். இது தவிர 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனா்.

ஆதரவை வாபஸ் பெற்றது தொடா்பாக தோடா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன் கருதி ஆளும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவைப் திரும்பப் பெறுகிறேன். மக்கள் நலனும், அவா்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே எனக்கு முக்கியம்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தோடா தொகுதியில் பாஜக வேட்பாளா் கஜய் சிங் ராணாவை 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் மெஹ்ராஜ் மாலிக் வென்றாா். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் முதல், ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏ என்ற பெருமையை அவா் பெற்றாா். கடந்த மாா்ச் மாதத்தில் ஜம்மு-காஷ்மீா் ஆம் ஆத்மி தலைவராகவும் அவா் நியமிக்கப்பட்டாா்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க