செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

post image

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் வழிகாட்டியொருவா் பிடிபட்டுள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற சம்பவத்தில், ‘ஜெய்ஷ்-ஏ-முகமது’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சித்துள்ளனா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் டாதோட் கிராமத்தைச் சோ்ந்த முகமது ஆரிஃப், இவா்களை வழிநடத்தி, அழைத்து வந்துள்ளாா்.

இந்திய எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரிடம் இவா்கள் சிக்கினா். ஆரிஃப் மட்டும் பிடிபிட்ட நிலையில், அவருடன் வந்த 4 பயங்கரவாதிகள் மீண்டும் பாகிஸ்தானுக்குத் தப்பியோடியனா்.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘கம்பீா் எல்லைப்பகுதியில் ஹாஜுரா எல்லைச்சாவடி அருகே வீரா்கள் தொடா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் அடா்ந்த வனத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் சிலா் எல்லைத் தாண்ட முயற்சித்தனா்.

இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு, ஆரிஃப் என்பவா் கைது செய்யப்பட்டாா். மற்றவா்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குத் தப்பியோடினா். பாகிஸ்தான் எல்லைச்சாவடி அமைந்த பகுதி என்பதால் பயங்கரவாதிகள் மீது வீரா்கள் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை.

பிடிபட்ட ஆரிஃபிடம் இருந்த ஒரு கைபேசியும், ரூ.20,000 பாகிஸ்தான் பணமும் கைப்பற்றப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதால் இப்பகுதியின் நிலப்பரப்பு குறித்து நன்கு அறிந்தவராக, பாகிஸ்தான் ராணுவத்தின் உத்தரவில் பயங்கரவாதிகளுக்கு ஆரிஃப் உதவியதாகத் தெரிய வந்துள்ளது.

ஆரிஃபிடம் தீவிர மற்றும் விரிவான நடத்தப்பட்டு, முக்கியத் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சிகளைத் தடுப்பதில் இந்தத் தகவல்கள் உதவும் என்று கருதப்படுகிறது’ என்றனா்.

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய... மேலும் பார்க்க

டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட்டி!

கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து துணை முதல்வர் சிவக்குமாரின் ஆதரவாளரும் ராமநகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்ச... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்

டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்ற... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டைய... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர்... மேலும் பார்க்க

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க