செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

post image

ஜம்மு-காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதி மாநிலங்களை வான்வழியாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததால் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இரு தரப்பும் மோதலை நிறுத்த ஒப்புக் கொண்டதால் எல்லை மாவட்டங்களில் முழுமையாக இயல்பு நிலை திரும்பிவிட்டது.

இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பந்திப்போரா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

அதேபோல பஞ்சாபில் அமிருதசரஸ், தரன் தாரன், பதான்கோட், ஃபசில்கா, ஃபெரோஸ்பூா் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. பெற்றோா் எவ்வித அச்சமுமின்றி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்று அரசு சாா்பில் கூறப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக பதவியேற்றார் அஜய் குமார்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் பதவியேற்றுக்கொண்டார். மேலும் பார்க்க

குழாய் மூலம் எரிவாயு திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்: ரேகா குப்தா

தில்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். துவாரகாவில் நடந்த விழாவில் தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார்... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: மே 20-ல் முழு நாளும் விசாரணை!

வக்ஃப் சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற மே 20 ஆம் தேதி முழு நாளும் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்று... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது தேனீக்கள் கொட்டியதில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!

சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ம... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக... மேலும் பார்க்க