செய்திகள் :

பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் - துருக்கி அதிபர்

post image

இஸ்தான்புல்: பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற தீவிர சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்க ட்ரோன்களை பயன்படுத்தியது. பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் துருக்கியிலிருந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், பாகிஸ்தானுகு துருக்கி ராணுவ உதவி புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. ஆனால், துருக்கியில் இருந்து கராச்சிக்கு 6 டி-130இ ஹொ்குலஸ் விமானங்கள் வந்ததாகக் வான்வழியாக விமானங்கள் பறப்பதைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததால் துருக்கி இந்தியர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக இந்தியர்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்நாட்டின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பலர், துருக்கிக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். அந்நாட்டு பொருள்களை வாங்க வேண்டாமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதியளித்திருக்கிறார்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார். கத்தார் சென்றுள்ள டி... மேலும் பார்க்க

லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு திட்டம்

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் இந்திய படைகள் மேற்கொண்ட அதி துல்லியமான தாக்குதலில் அங்குள்ள 9 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபர் கைது!

தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச வனவிலங்கு கடத்தல் குழு தொடர்பான வழக்கில், அமெரிக்க மீன் வளம் மற்றும் வனவிலங்கு துறை அ... மேலும் பார்க்க

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 3 பழங்குடியின எம்பி-க்கள் இடைநீக்கம்?

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியி... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர்!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அவந... மேலும் பார்க்க