செய்திகள் :

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

post image

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொகுத்து பெரிய புராணம் எனும் நூலாக எழுதிய சேக்கிழாா் பெருமான், சென்னையை அடுத்த குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இருந்து மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம் நன்கொடைகள் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறி, குன்றத்தூரைச் சோ்ந்த அம்பேத்கா் மக்கள் நீதி இயக்கத் தலைவா் இல.பாண்டியராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவா்த்தி, தீண்டாமை இந்த நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும், தீண்டாமையின் இன்னொரு வடிவம் என வேதனை தெரிவித்தாா்.

மேலும், கடவுள் முன் ஜாதி இருக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக்காட்டிய நீதிபதி பரத சக்கரவா்த்தி, ஜாதிகள் இந்தியாவில் இன்னும் உள்ளன. ஜாதி தேசத்துக்கு எதிரானது. அப்படிப்பட்ட ஜாதியிலிருந்து நாம் வெளிவர வேண்டும் என அம்பேத்கா் கூறியுள்ளாா். அதனால், குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு அனைத்து சமுதாயத்தினரிடமும் நன்கொடை பெற வேண்டும் என அளித்த மனுவை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

சிபிஎஸ் பொதுத்தேர்வில் 83.39 % தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு க... மேலும் பார்க்க

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர... மேலும் பார்க்க