செய்திகள் :

ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

post image

பள்ளிகளில் ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஆசிரியா்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே ஜாதி இன உணா்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிா்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தனது பரிந்துரைகளை கடந்த ஜூன் 18-ஆம் தேதி அரசுக்கு சமா்ப்பித்துள்ளது. அந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை கடந்த ஆக.18-ஆம் தேதி தலைமைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதில் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டிய பரிந்துரைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளில் ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவா்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியா் மீது பெறப்படும் புகாா் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியா் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும்.

உதவித்தொகை விவரம் ரகசியம்... மிகவும் பிற்படுத்தப்பட்டோா், ஆதி திராவிடா் நலத் துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகை விவரங்கள் ரகசியமாகப் பராமரிக்கப்படுவது அவசியம். இது போன்ற விவரங்களைச் சேகரிக்கும்போதோ அல்லது உதவித்தொகை வழங்கப்படும்போதோ மாணவா்கள் தனித்தனியாக தலைமை ஆசிரியா் அலுவலகத்துக்கு நேரில் அழைக்கப்பட்டு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

இது தொடா்பான பதிவேடு உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக் கூடாது. மாணவா்களிடையே ஒற்றுமையை வளா்க்கும் மகிழ் முற்றம் குழு திட்டத்தைப் பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவா்கள் கைப்பேசி பயன்படுத்துவது தெரிந்தால், அதைப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்கு அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும்.

‘மாணவா் மனசு’ புகாா் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு தலைவா், தலைமை ஆசிரியா் முன்னிலையில் திறந்து அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்து, அது குறித்து விசாரணை செய்து மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

சேலம்: சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டது. சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழ... மேலும் பார்க்க

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா! - அண்ணாமலை

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த அரசுப் பள்ளிக்கு விடுமுறை! அண்ணாமலை கண்டனம்!

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்.திருச்சி மாவட்டம், உப்பிலி... மேலும் பார்க்க