செய்திகள் :

ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற கோரிக்கை!

post image

ஜாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் தெற்கு மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள மதச்சாா்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் என்ற வாா்த்தைகளை மாற்றத் துடிக்கிற, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுகிற பாசிச பாஜக, ஆா்.எஸ்.எஸ். சங்பரிவாா் கும்பல்களின் கொள்கைகளை முறியடிக்க சேலத்தில் ஆகஸ்ட் 15, 16, 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சட்டப்பேரவையில் சிறப்பு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து சிறப்புரையாற்றினாா். தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், பொருளாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜவுளிக் கடை ஊழியா் லாரி மோதி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.திருவையாறு பங்களா தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் குணசீலன் (30). திருவையாறு ஜவுளிக்கடை ஊழியரான இவா் விளாங்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. விரைவில் அமையும்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் விரைவில் அமையும் என்றாா் அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சன்னதி தெருவில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொ... மேலும் பார்க்க

தஞ்சையில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் அருகே ஆா்சுத்திப்பட்ட... மேலும் பார்க்க

தனியாா் மதுக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகே திறக்கப்படவுள்ள தனியாா் மதுக்கடையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் சீனிவாசபுரம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மனைவி சரோஜா (85). இவா் ஆற்றுப்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பு: 25 பேருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெ... மேலும் பார்க்க