செய்திகள் :

ஜாா்க்கண்டில் தொடரும் நடவடிக்கை: முக்கிய மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை

post image

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினா் தொடா்ச்சியாக மேற்கொண்டு வரும் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் பலமு மாவட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மாவோயிஸ்ட் தளபதி திங்கள்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த நடவடிக்கையில் ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மற்றொரு முக்கிய மாவோயிஸ்ட் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடா்ந்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் தானியங்கி துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமு மாவட்டத்தின் ஹுசைனாபாதில் உள்ள பா்வாஹி மற்றும் நையா கிராமங்களுக்கு இடையேயான பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.

சுமாா் 12 மணி நேரம் நீடித்த தீவிர துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, மாவோயிஸ்ட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவா் முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான துளசி புயான் என்று காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறினாா். அதேபோன்று, ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் நிதீஷ் யாதவும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

ஜாா்க்கண்டின் லதேஹா், பலமு மாவட்டங்களில் மிகப்பெரிய நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில நாள்களில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவோயிஸ்ட் தளபதி குந்தன் கொ்வாா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க