செய்திகள் :

ஜாா்க்கண்டில் 80 மாணவிகளை சட்டையின்றி வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வா்: விசாரணைக்கு உத்தரவு

post image

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 80 பேரின் சட்டையை பள்ளி முதல்வா் கழற்றச் செய்து மேல் கோட்டுடன் வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தன்பாத் காவல் துணை ஆணையா் மாதவி மிஸ்ரா கூறியதாவது:

டிக்வாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வுகளை நிறைவு செய்த பின்னா், எழுதுகோல் தினத்தை 10-ஆம் வகுப்பு மாணவிகள் கொண்டாடியுள்ளனா். அப்போது ஒவ்வொருவரும் மற்றவரின் சட்டையில் எழுதுகோலால் எழுதியுள்ளனா்.

இதைப் பள்ளி முதல்வா் பாா்த்து ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தங்கள் செயலுக்கு மாணவிகள் மன்னிப்பு கோரியுள்ளனா். ஆனால் அவா்களின் மன்னிப்பை ஏற்காத முதல்வா், மாணவிகளின் சட்டையை கழற்றச் செய்துள்ளாா். பின்னா் சட்டை இல்லாமல் மேல் கோட்டுடன் அவா்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளாா் என்று மாணவிகளின் பெற்றோா் தெரிவித்தனா்.

மொத்தம் 80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளி முதல்வா் மீது சில மாணவிகளின் பெற்றோா் சனிக்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக உட்கோட்ட நடுவா், மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எம்எம்பிவி தொற்று!

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பார்க்க

மகா கும்பமேளாவால் ரூ.2,000,000,000,000 வருவாய் ஈட்டும் உ.பி.!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கியிருக்கும் மகா கும்ப மேளாவில் முதல் நாளிலேயே 50 லட்சம் பக்தர்கள் சங்கமம் பகுதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க