செய்திகள் :

ஜிஎஸ்டி: இறுதியில் ராகுலின் ஆலோசனையைப் பின்பற்றிய பாஜக அரசு! - காங்கிரஸ்

post image

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு மூலமாக மத்திய பாஜக அரசு, ராகுலின் அறிவுரையைப் பின்பற்றியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் நான்கு விகித ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பால் பொருள்கள், குழந்தைகளுக்கான பொருள்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. வருகிற செப். 22 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்புக்கு வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும் இதனைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆண்டு காலம்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அதிகபட்சமாக ஜிஎஸ்டி வரி விகிதம் 18% சதவீதமாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016 ஆம் ஆண்டே கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த எக்ஸ் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் கடந்த 2016ல் எக்ஸ் பக்கத்தில், "நாட்டில் அனைத்து மக்களின் நலனுக்கும் ஜிஎஸ்டி வரியின் அதிகபட்சம் 18% ஆக இருக்கும். ஜிஎஸ்டி, பணக்காரர்களுக்கு மட்டுமானதாக மட்டுமின்றி ஏழை, சாதாரண மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். அதனால் ஜிஎஸ்டி 18% மற்றும் அதற்கு குறைவானதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, ராகுலின் பதிவைப் பகிர்ந்து, "இறுதியாக அவர்கள்(பாஜக) ராகுலின் அறிவுரையைப் பின்பற்றும் நிலையில் அதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார்கள்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

Congress leader Pawan Khera slams Modi Govt's GST reforms: 'Finally have to follow Rahul Gandhi's advice'

இதையும் படிக்க |ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க