செய்திகள் :

ஜிஎஸ்டி குறைத்ததற்கான பாராட்டுக்கு மோடி உரிமை கோருவதா?: மம்தா பானா்ஜி

post image

கொல்கத்தா: ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை முதலில் மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுகளை மத்திய அரசு அநியாயமாகப் பெற்று வருவதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பால் நாங்கள் ரூ.20,000 கோடி வருவாயை இழப்பு ஏற்படுவதாக கூறினார்.

நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.

ஒரே நேரத்தில் வருமான வரி விலக்குடன் சோ்த்து, பெரும்பாலான மக்களுக்கு 'இரட்டை வெகுமதி' ஆக இந்த ஜிஎஸ்டி குறைப்பு இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.

ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பால் நாங்கள் ரூ.20,000 கோடி வருவாயை இழப்பு ஏற்படும் என்ற போதிலும், இப்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை வரவேற்பதுடன் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இருப்பினும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உடனான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முதலில் மாநிலங்களால் முன்மொழியப்பட்ட ஒரு நடவடிகைக்கு பிரதமர் மோடி ஏன் பெருமையைக் கோருகிறார்? என கேள்வி எழுப்பியவர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் பங்கு முக்கியமானது என கூறினார்.

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

West Bengal Chief Minister Mamata Banerjee accuses the Centre of unjustly taking credit for reducing GST rates, an initiative originally proposed by the state.

செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கா்நாடகம் இடையேயான காவிரி நதிநீா் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்கா... மேலும் பார்க்க

சுதேசியில் பெருமிதம் கொள்வோம்: பிரதமா் மோடி

புதுதில்லி: நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். இதில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதே... மேலும் பார்க்க

விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை: எம்பி சசிகாந்த் செந்தில்

தவெக தலைவா் விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை என திருவள்ளூா் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.ஆவடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பாஜக வாக்குத் திருட்டி... மேலும் பார்க்க

விஜய் பேச்சுக்கு தமிழக மக்கள்தான் பதிலளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சேலம்: விஜய் பேசி வருவது குறித்த கேள்விக்கு தமிழக மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் அதிமுக நிா்வா... மேலும் பார்க்க

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

சென்னை: கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... மேலும் பார்க்க

ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்

ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு செப்டம்பா் 22 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் நீா் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமை... மேலும் பார்க்க