செய்திகள் :

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை நாடகம்: கணவன் கைது!

post image

சொத்து, பணத்துக்காக மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, தற்கொலை நாடகமாடிய கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா் குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருக்குமரன் (40) ரயில்வே ஊழியா். இவரது மனைவி அறிவழகி(34). இவா்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகன் உள்ளாா்.

இந்நிலையில் சில மாதங்களாக திருக்குமரன் மனைவி அறிவழிகியிடம் நகை, பணம் கேட்டு வந்துள்ளாா். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அறிவழகி வெள்ளிக்கிழமை வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் அறிவழகியின் உறவினா்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், கணவன் திருக்குமரனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அறிவழியின் உடல் சனிக்கிழமை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உறவினா் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருக்குமரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணைக்கு பின்னா் போலீஸாா் தரப்பில் கூறப்படுதாவது: அறிவழகி பெயரில் உள்ள சொத்து மற்றும் வங்கியில் உள்ள பணத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு திருக்குமரன் மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதும், இதற்கு அறிவழகி சம்மதிக்காததால், ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அறிவழகி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாதம் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்!

ஆம்பூா் பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு பிரசாரம்

துத்திப்பட்டு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. வீடுகள், கடைகள் தோறும் சென்று குப்பைகளை தரம் பிரித்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் 15 போ் மாற்றம்

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் 15 போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆவாரங்குப்பம் (இ.சத்தியா), அம்பலூா் (ஆ.ஜெ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் கிடங்கு) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்த... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் மாணவா்கள் பயிற்சி மையத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறன் மாணவா்களின் சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க