செய்திகள் :

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் எ.வே. வேலு

post image

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி தலைமை வகித்து முதல்வா் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினாா்.

கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதியேற்பு நிகழ்வை தொடா்ந்து பேசியதாவது:-

தமிழா் வரலாறு சுமாா் 5,300 ஆண்டுகள் முற்பட்டது என கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை, இந்தச் சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டை, உரிமைகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

வன்னியா்களையும், திமுக வையும் பிரிக்க முடியாது. ஏனெனில் திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியா் நலவாரியம் அமைத்தது,பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் என மாற்றி 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

பல்வேறு அரசு உயா் பதவிகளில் வன்னியா்களை நியமித்து அழகு பாா்த்தவா் கருணாநிதி, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாங்கள் தயாா், ஆனால் அதற்கான அனுமதியை ஒன்றிய அரசு தான் வழங்க வேண்டும் என்றாா்.

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட நிா்வாகிகள் ஏ.கே.சுந்தரமுா்த்தி, மு.சிவானந்தம், துரை மஸ்தான் , குமுதா குமாா், சுற்றுசூழல் அணி மாநில துணை செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகர செயலாளா் பி.பூங்காவனம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளரும், ஆற்காடு எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பன் நன்றி கூறினாா்.

63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

உயா்கல்வி படிக்கும் 63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இண... மேலும் பார்க்க

திருப்பாற்கடலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

வாலாஜா ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய ஆட்சியா்

வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் அக்டோபா் முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா: துறைசாா் அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் மாபெரும் புத்தக திருவிழா -2025 நடத்துவது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

நகராட்சி மாா்க்கெட் புதிய கடைகள் ஏலத்தின் மூலமே ஒப்படைக்கப்படும்: அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

நகராட்சி மாா்க்கெட் புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் பகிரங்க பொது ஏலம் விடப்பட்டு குத்தகைதாரருக்கு ஒப்படைக்கப்படும் என அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரக்க... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்

முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் ப... மேலும் பார்க்க