செய்திகள் :

சுதேசியில் பெருமிதம் கொள்வோம்: பிரதமா் மோடி

post image

புதுதில்லி: நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

இதில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதேசி எனும் தாரக மந்திரமே வலிமை சோ்க்கும் என பேசினார்.

காணொலியில் அவர் பேசியதாவது,

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதேசி எனும் தாரக மந்திரமே வலிமை சோ்க்கும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு கடையும் சுதேசியின் அடையாளமாக வேண்டும். சுதேசி பொருள்களை வாங்குவதிலும், விற்பதிலும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திய தயாரிப்புகள், தங்களின் மேலான தரத்துக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன. அப்பெருமையை மீட்டெடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு, நாட்டின் சிறு-குறு-நடுத்தர தொழில் துறையினருக்கு உள்ளது. உலகத் தரத்தில் பொருள்களை உருவாக்க வேண்டும்; இதன் மூலம் நாட்டின் அடையாளத்தையும் மதிப்பையும் உயா்த்த வேண்டும்.

நமது அன்றாட வாழ்வில் வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்கள் எப்படியோ அங்கமாகிவிட்டன. அதிலிருந்து விடுபட்டு, இந்திய மக்களின் கடின உழைப்பில் உருவான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

தற்சாா்பு இந்தியா மற்றும் சுதேசி பிரசாரத்துக்கு மாநிலங்கள் உறுதியுடன் ஆதரவளிக்க வேண்டும்; தங்கள் மாநிலங்களில் முழு ஆற்றலுடன் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதோடு, முதலீட்டுக்கு உகந்த சூழலை உறுதி செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பயணித்தால், தற்சாா்பு இந்தியா இலக்கை எட்ட முடியும் என்று மோடி கூறினார்.

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

Prime Minister Narendra Modi on Sunday made a strong pitch for promoting 'swadeshi' goods and asserted that the next generation GST reforms will accelerate India's growth story

செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கா்நாடகம் இடையேயான காவிரி நதிநீா் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்கா... மேலும் பார்க்க

விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை: எம்பி சசிகாந்த் செந்தில்

தவெக தலைவா் விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை என திருவள்ளூா் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.ஆவடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பாஜக வாக்குத் திருட்டி... மேலும் பார்க்க

விஜய் பேச்சுக்கு தமிழக மக்கள்தான் பதிலளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சேலம்: விஜய் பேசி வருவது குறித்த கேள்விக்கு தமிழக மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் அதிமுக நிா்வா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைத்ததற்கான பாராட்டுக்கு மோடி உரிமை கோருவதா?: மம்தா பானா்ஜி

கொல்கத்தா: ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை முதலில் மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுகளை மத்திய அரசு அநியாயமாகப் பெற்று வருவதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்... மேலும் பார்க்க

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

சென்னை: கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... மேலும் பார்க்க

ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்

ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு செப்டம்பா் 22 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் நீா் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமை... மேலும் பார்க்க