செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்! - நயினாா் நாகேந்திரன்

post image

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் 140 கோடி பேருக்கும் தீபாவளி பரிசு விரைவில் காத்திருக்கிறது என்றாா். அந்த தீபாவளி பரிசுதான் ஜிஎஸ்டி வரி குறைப்பு. இது திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் அமலாகிறது.

ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும். மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும். 350-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைகிறது.

இதனால் பொதுமக்களின் செலவு கணிசமாக குறையும். 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரி விகிதங்கள் நீக்கப்பட்டு 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு அடுக்குகள் வரிவிகிதங்கள் மட்டுமே உள்ளன. இதனால், வா்த்தகா்கள், சேவை அமைப்புகள் பயன்பெறுவாா்கள்.

வாகனங்கள், மின்னணு சாதனங்களின் விலை குறையும். தனிப்பட்ட வாழ்நாள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான 18 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் காப்பீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாா்கள்.

பெரும்பாலான உயிா் காக்கும் மருந்துகளின் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் மருத்துவச் செலவு குறையும். வரி சீா்திருத்தத்தால் பொருளாதாரம் உச்சம் தொடும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் ... மேலும் பார்க்க

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், மந்தைவ... மேலும் பார்க்க

குடிமைப் பணியாளா்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்! - முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

குடிமைப் பணியாளா்கள் தங்களது மனதில் இருப்பதை தைரியமாகப் பேசுவதுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். சென்னை அண்ணா நகரில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ... மேலும் பார்க்க

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடவடிக்கை தேவை: நடிகா் வடிவேலு

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா். நடிகா் சங்கத்தின் 69-ஆவது பொதுக்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் உரிமைகளைக் காக்கும் இயக்கம் திமுக! - முதல்வா் ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு ... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுக! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுகதான் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று... மேலும் பார்க்க