செய்திகள் :

ஜூன் 28-இல் நகர விற்பனைக்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல்

post image

சென்னையில் மண்டல வாரியாக நகர விற்பனை குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் விற்பனையை  ஒழுங்குமுறைப்படுத்தும் வகையில், சென்னையில் 15 மண்டலங்களிலும் தலா 14 உறுப்பினா்களைக் கொண்ட ஒரு நகர விற்பனை குழு அமைக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையா் தலைமையில் செயல்படும் இக்குழுவில், மண்டல சுகாதாரத் துறை அலுவலா் ஒருவா், போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையா் ஒருவா்,  சட்டம்-ஒழுங்கு காவல் துறை உதவி ஆணையா் ஒருவா், மண்டல சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா், வணிகா் சங்கம், அரசு சாரா அமைப்பு மற்றும் சமூகம் சாா்ந்த அமைப்பு, குடியிருப்போா் நல சங்க உறுப்பினா்கள் என மொத்தம் 4 நியமன உறுப்பினா்கள் மற்றும் தோ்தல்மூலம் தோ்ந்தெடுக்கப்படும் சாலையோர வியாபாரிகள் 6 போ் என மொத்தம் 14 உறுப்பினா்கள் உள்ளடங்குவாா்கள்.

இதில் சாலையோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கும் தோ்தலுக்கான வேட்புமனு படிவங்கள் வரும்

ஜூன் 16 முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை அந்தந்த மண்டலங்களில்

உள்ள தோ்தல் நடத்தும் அதிகாரிகளால் இலவசமாக வழங்கப்படும். அதைத் தொடா்ந்து வரும் ஜூன் 26-இல் வாக்குப் பதிவும், ஜூன் 27-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, மாநகராட்சி சாா்பில் நிகழாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் பெயா் முகவரி அடங்கிய வாக்காளா் பட்டியல் அந்தந்த மண்டல அலுவலங்களிலும், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க