செய்திகள் :

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டு பேசினார். தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் நிகழ்வில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.

அவர் பேசுகையில், "மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும்.

நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள்!

இந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும். இதுவே கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம்.

இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மேல் 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும்.

இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள் இதில் எப்படி விண்ணப்பிப்பது? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள் உங்கள் வீடுதேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் மாறவில்லைமசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லைமுதல்வர் பேச்சு

இயந்திரக் கோளாறு: லண்டன் - சென்னை விமானம் ரத்து

சென்னை: லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானங்கள் ர... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு... மேலும் பார்க்க

தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 % நிறைவு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேக்குள்பட்ட தங்க நாற்கர ரயில்வே வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பி... மேலும் பார்க்க

மாய உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

சென்னை: தமிழகத்தில் அனைவரும் தம்மை பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு மாய உலகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்ந்து வருவதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர ரயில் இன்று தாமதமாக இயக்கம்

சென்னை: கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தன்பாத் செல்லும் விரைவு ரயில் 8 மணிநேரம் தாமதமாக இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோ... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தா் பதவியேற்பு

சென்னை: தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நீதிபதி சுரேந்தருக்கு உயா்நீதிமன்றத் தலைமை... மேலும் பார்க்க