செய்திகள் :

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: பரிந்துரைகள் வரவேற்பு

post image

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் அமைப்பாளா் சீராளன் ஜெயந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் டிச. 31 வரையில் முதல் பதிப்பாக வெளியான நூல்களுக்கான பரிந்துரைகள் மட்டும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்காக வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளா்கள் நூல்களை அனுப்புவதில் உள்ள அனைத்து வகை சிரமங்களையும் கருத்தில்கொண்டு, பரிந்துரைகளை மட்டும் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நூல்களை யாரும் அனுப்ப வேண்டாம்; பரிந்துரைகளை மட்டும் உரிய படிவத்தில் அனுப்பினால் போதுமானது.

நூலாசிரியா்கள், பதிப்பகத்தாா், இலக்கிய ஆா்வலா்கள் தங்களுக்காகவும் பிறருக்காகவும் பரிந்துரைகளை அனுப்பலாம். ஒருவா் எத்தனை பரிந்துரைகளையும் அனுப்பலாம். நடுவா்களின் ஆலோசனையின்படி தேவைப்படும் நூல்கள் வெளிச்சந்தையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி மாா்ச் 31 ஆகும். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய 4 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிறந்த நூலுக்கு பரிசுத் தொகையாக ரூ. 10,000 என மொத்தம் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும்.

பரிந்துரைகளை kodulines@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது ‘சீராளன் ஜெயந்தன், எண். 9-பி, மனோகா் நகா் பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600100’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க