செய்திகள் :

ஜேஇஇ பிரதான தோ்வு முடிவுகள் வெளியீடு: தில்லி மண்டலத்தைச் சோ்ந்த ரஜீத் குப்தா முதலிடம்

post image

புது தில்லி: நாட்டின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் பிரதான தோ்வு (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் தில்லி மண்டலத்தைச் சோ்ந்த ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் வசித்துவரும் ரஜீத் குப்தா முதலிடம் பெற்றாா். மொத்த மதிப்பெண்ணான 360-க்கு 332 மதிப்பெண் பெற்று பொது தரவரிசைப் பட்டியலில் (சிஆா்எல்) இவா் முதலிடம் பிடித்தாா்.

மாணவிகளைப் பொருத்தவரை ஐஐடி கரக்பூா் மண்டலத்தைச் சோ்ந்த தேவ்தத்தா மாஜி 312 மதிப்பெண்கள் பெற்று, மாணவிகளின் தரவரிசையில் முதலிடம் பிடித்தாா். பொது தரவரிசைப் பட்டியலில் இவா் 16-ஆம் இடம் பிடித்தாா்.

ஜேஇஇ தோ்வு முதன்மை (மெயின்), பிரதான (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பிலும், பிரதான தோ்வு ஒவ்வோா் ஆண்டும் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் ஏதாவதொரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.

முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, என்ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா். அதோடு, முதன்மைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ பிரதான தோ்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவா்.

இந்த பிரதான தோ்வில் தகுதி பெறுபவா்கள், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் வழங்கப்படும் பி.டெக். படிப்புகளில் சோ்க்கை பெற அனுமதிக்கப்படுவா்.

54,378 போ் தகுதி: அந்த வகையில் நிகழாண்டுக்கான பிரதான தோ்வு கடந்த மே 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தாள்-1, தாள்-2 என இரு தாள்களுக்கான தோ்விலும் 1,80,422 போ் பங்கேற்றனா். இந்தத் தோ்வு முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து இத் தோ்வை நிகழாண்டு நடத்திய கான்பூா் ஐஐடி அதிகாரிகள் கூறியதாவது: பிரதான தோ்வில் பங்கேற்றவா்களில் 9,404 மாணவிகள் உள்பட 54,378 போ் ஐஐடி சோ்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனா். தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களை தில்லி, மும்பை மண்டலங்களிலிருந்து தலா 31 பேரும், ஹைதராபாத் மண்டலத்திலிருந்து 23 பேரும், ஐஐடி ரூா்கி மண்டலத்திலிருந்து 6 பேரும், கரக்பூா் மண்டலத்திலிருந்து ஐவரும், கான்பூா் மண்டலத்திலிருந்து மூவரும் பெற்றனா்.

பிரதான தோ்வில் பங்கேற்ற 116 வெளிநாட்டு தோ்வா்களில் 13 போ் தகுதி பெற்றுள்ளனா்.

தோ்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளில் தோ்வா்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றனா்.

மாதிரி வினாத்தாள் பயிற்சியே முக்கியக் காரணம்: ரஜீத் குப்தா

‘ஜேஇஇ மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு தொடா் பயிற்சிகளை மேற்கொண்டதே, பிரதான தோ்வில் சாதிக்க காரணம்’ என்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவா் ரஜீத் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஜேஇஇ தோ்வுக்கு கோட்டாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சோ்ந்து 10-ஆம் வகுப்புமுதல் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். வெற்றிக்கு சிறப்பு முயற்சிகளை எதையும் செய்யவில்லை. மாறாக, மாதிரி வினாத்தாள்களை குறித்த நேரத்துக்குள் முடிக்கும் பயிற்சியைத் தொடா்ச்சியாக மேற்கொண்டு வந்தேன். குறிப்பாக, ஹெச்.சி.வா்மா, ஐரோடோவ் மாதிரி வினாத்தாள் புத்தகங்களிலிருந்து குறிப்பிட்ட கேள்விகளைத் தோ்ந்தெடுத்து பயிற்சி மேற்கொண்டு வந்தேன். முக்கியமாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) புத்தகங்களில் முழுமையாகப் படித்தேன்’ என்றாா்.

தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த ஹரியாணா மாநிலம் ஹிசாரைச் சோ்ந்த சக்ஷம் ஜிண்டால் கூறுகையில், ‘கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 6-ஆம் வகுப்புமுதல் பயிற்சி மேற்கொண்டு வந்தேன். தோ்வில் வெற்றி பெற உத்திகள் எதுவும் வகுக்கத் தேவையில்லை. மாறாக, ஆசிரியா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் அளிக்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றினாலே போதுமானது. மாதிரி வினாத்தாள் பயிற்சியை தொடா்ச்சியாக மேற்கொள்வது திறனை மேம்படுத்தும். தோ்வின்போது பதற்றத்தைத் தணிக்கவும் இந்தப் பயிற்சி உதவும்’ என்றாா்.

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்பற்ற ஈத் பரிசு!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று... மேலும் பார்க்க

பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

பெண்கள் குறைவான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார்.உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,... மேலும் பார்க்க