செய்திகள் :

ஜேஇஎம் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி சுட்டுக்கொலை: ஜம்மு-காஷ்மீா் காவல் துறை டிஜிபி

post image

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல் துறை டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஜம்மு அருகே உள்ள அக்னூா் காவல் நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் உள்ள டூடூ-பசந்த்கா் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில் ஹைதா் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா். அவா்களின் 3 கூட்டாளிகள் தப்பிவிட்டனா். சுட்டுக்கொல்லப்பட்ட ஹைதா் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதியாக இருந்தாா்.

ஜம்மு மண்டலத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனா் என்பதை பொது வெளியில் கூற இயலாது. அவா்களை ஒழிக்கும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து வருகின்றனா்’ என்றாா்.

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க